இலவசமாக இன்டர்நெட்
நியுயார்க்:
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உலகம் முழுவதிலுமுள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்காகஸ்டார்டெக் க்ளோபல் கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தனியார் இன்டர்நெட் நிறுவனம் இலவசமாக இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
இதுகுறித்து, ஸ்டார்டெக் க்ளோபல் நெட் நிறுவனத்தார் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் மற்றும்பல இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் உடைமைகள், உறவினர்களை இழந்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களதுஉறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள எவ்வித வசதியும் இல்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளோம். இவர்கள் ஈஸ்டார்ட் . காம் என்ற தளத்தின் மூலம்இலவசமாக தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசலாம்.
ஈஸ்டார்ட். காம் மூலம் பொதுமக்கள் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்திகள் அனுப்பலாம். அது வாய்ஸ் மெயிலாக மாற்றப்பட்டுசம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு அனுப்பப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் இலவசமாக செய்திகளை அனுப்பலாம் என்றுகூறியுள்ளது.
ஸ்டார்டெக் நிறுவன அதிகாரி ராம் முகுந்த் கூறுகையில், இந்த இணைய தளம் மூலம், செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் சாட்டிங் ஆகியஅனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications