சி.பி.ஐ. இயக்குநர் நியமனம் செல்லாது ..டிரிப்யூனல்
பெங்களூர்:
மத்திய புலனாய்வுத் துறை ஏஜென்சியான சி.பி.ஐ.யின் இயக்குநராக ஆர்.கே.ராகவன்நியமிக்கப்பட்டதை ரத்து செய்து பெங்களூரிலுள்ள மத்திய நிர்வாகவியல் நடுவர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்யுமாறும் மத்திய அரசுக்குஅது உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்.அதிகாரியான ராகவன், 1998-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது நியமனம் சட்டவிரோதமானது, எனது மூப்புரிமைபுறக்கணிக்கப்பட்டு விட்டது என்று கூறி மத்திய நிர்வாகவியல் நடுவர் மன்றத்தில்தினகர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ ரெட்டி, கெளஷல்ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ராகவன் நியமனம்செல்லாது. புதிய சி.பி.ஐ. இயக்குநரை 2 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்என்று கூறப்பட்டது.
ஏற்கனவே, போலீஸ் டி.ஜி.பி. நியமன விஷயத்திலும் கர்நாடக அரசை எதிர்த்துவழக்குத் தொடர்நது அதில் வெற்றியும் பெற்றவர் தினகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அப்பீல் செய்யுமா என்பது குறித்துஉடனடியாகத் தெரியவில்லை.