தமிழக அழகியின் நிதி வசூல்
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கரின் காதலியும், ஜெர்மன்பாப் இசைப் பாடகருமான சபரினா இசை நிகழ்ச்சி நடத்தி நிதிவசூல் செய்து கொடுக்கவுள்ளார்.
சபரினா தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இதுகுறித்து சபரினா ஷெட்லூரின் உறவினர் சத்யம் ரங்கசாமிகூறுகையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் உடைமைகளையும்,உறவினர்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக ஜெர்மனில் இசை நிகழ்ச்சி நடத்த பாப் இசைப் பாடகி சபரினாதிட்டமிட்டுள்ளார். முதலில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து குஜராத் பூகம்ப நிவாரண நிதியாகக்கொடுக்குமாறு அவரிடம் ஆலோசனை கூறினோம்.அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே துருக்கியில் ஏற்பட்ட பூகம்ப நிவாரண நிதியாக இசை நிகழ்ச்சி நடத்தி சபரினா ரூ 50 லட்சம் வசூல்செய்து கொடுத்துள்ளார். அதே போல் இப்போதும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து கொடுப்பார் என்றார்.
பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் அவரது மனைவி பார்பராவிடமிருந்து பிரிந்த பின் அவருடன் சேர்த்துக்கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் சபரினா. இதுகுறித்து ரங்கசாமியிடம் கேட்டபோது, அவர்கள் இருவரும் நல்லநண்பர்கள். இருவருமே திருமண வயதை எட்டி விட்டவர்கள். அவர்கள் முறையாகத் திருமணம் செய்தால் அதில்தவறென்ன இருக்கிறது என்றார்.
சபரினாவின் தந்தை கிருஷ்ணன் தமிழகத்திலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் 1967 ல் ஜெர்மனுக்குச்சென்று விட்டார். இவரது தாய் கேரளாவைச் சேர்ந்தவர். முதலில் பெங்களூரில் நர்சாகப் பணிபுரிந்தார். பின்னர்இத்தாலி சென்று அங்கிருந்து ஜெர்மனி சென்றார். அங்கு கிருஷ்ணனைச் சந்தித்துக் காதலித்து மணம் புரிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.