டி.எம்.எஸ்சுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம்
மதுரை:
இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனிபா மற்றும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம் வழங்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்ச் செம்மல் பேரவை சார்பில் தமிழ் மொழிக்கு சிறந்த பணியாற்றியவர்களுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம்வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
விழாவில் கல்வி அமைச்சர் அன்பழகன், நாகூர் ஹனிபா மற்றும் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு தமிழ்ச்செம்மல் பட்டம் வழங்கிப் பேசுகையில், தற்போதுதமிழ்ச் செம்மல் பட்டம் பெற்ற அனைவரும் வயதில் பெரியவர்கள். தமிழ் மொழிக்காகத் தங்களை இணைத்துக் கொண்டு தமிழுக்காக உயிர்கொடுப்பவர்கள்.
தமிழகத்தில் டி.எம்.செளந்தர்ராஜனின் இசை புகாத செவிகளே கிடையாது. இவரது குரலைக் கேட்டு நான் பல முறை வியந்திருக்கிறேன்.
நாகூர் ஹனிபாவின் பாடல் இசை முரசு போன்று ஒலிக்கும். இவர்களுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன் என்றார்அன்பழகன்.












Click it and Unblock the Notifications