வீடு கேட்டால் மிரட்டல்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு கோரியவர்களை மிரட்டியதாக கான்ட்ராக்டரின் கூட்டாளிகள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டதில் உயிர்பிழைத்த அகமதாபாத்தைச் சேர்ந்த சிலர் கட்டிடம் கட்டிய சதீஷ் ஷாவை சந்தித்து இடிந்து போன வீடுகளுக்குமாற்று வீடு தருமாறு கேட்டுள்ளனர்.
இது குறித்து ஏற்பாடு செய்வதாக கூறிய அவர், குடியிருப்போரின் கோரிக்கையை ஏற்று புதியதாக வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்வது பற்றிய ஒரு திட்டம்அடங்கிய பேப்பரை கொடுத்துள்ளார். அத்திட்டம் அவருடைய பெயரால் வெளியிடப்படவில்லை மற்றும் அதில் அவர் கையெழுத்து இல்லை என்று கூறிகுடியிருப்போர் ஏற்க மறுத்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து தன்னுடைய ஆடிட்டரை சந்திக்கக் கூறியுள்ளார் சதீஷ் ஷா. ஆனால் நெடுநேரமாகியும் ஆடிட்டர் வரவில்லை. குடியிருப்போர் இருந்தஅலுவலகத்திற்கு வந்த ஆறு நபர்கள் அவர்களை திட்டியதோடு மிரட்டியும் உள்ளனர்.
பின்னர் குடியிருப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் அவர்கள் முறையிட்டதை அடுத்து மிரட்டியவர்களில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, குஜராத்தில் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் விதிமுறைகளை மீறியே கட்டப்பட்டுள்ளன. இதற்காக குஜராத் உயர்நீதிமன்றம்அரசாங்கத்தை கடுமையாக சாடியதோடு பல கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து குஜராத் அரசு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டகட்டிடங்கள் அபராதத் தொகை கட்டினால் அவற்றிற்கு அனுமதி தர புதிய அவசர சட்டம் பிறப்பித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications