மேலிட முடிவை ஏற்போம் .. காங்கிரஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தொகுதி உடன்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி எடுக்கும்முடியவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயண சுவாமிதெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல்வர் சண்முகத்துடனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஓ.எச். பாரூக்குடனும் சோனியா காந்தியை சந்தித்துபேசினோம். அப்போது பா.ம.க , அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருப்பதால் நிலவி வரும் அரசியல் நிலைமைகுறித்து விவாதித்தோம்.
கூட்டணி குறித்து முடிவு செய்யும் முன் பாண்டிச்சேரி காங்கிரசுடன் விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது 32 சதவிகித ஒட்டுகள்பெற்றோம் என்பதையும் தெரிவித்தோம்.
தேர்தலில் அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால் , காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள்.இது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் காங்கிரஸ்தூதர் சென்னை வரும் போது அவருக்கு தெரிவிக்கப்படும்.
பா.ம.க. பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியிருப்பது குறித்து எதுவும் கூறஇயலாது. ஏனென்றால் ஜெயலலிதாவுக்கும், ராமதாசுக்குமிடையே எந்த விதமான பேச்சு வார்த்தை நடந்ததுஎன்பது தெரியவில்லை. எந்த முடிவு எடுப்து என்றாலும் காங்கிரஸ் தூதர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு தான்எடுக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications