பா.ம.க. முடிவு தெரிந்ததுதான் ..பா.ஜ.க
காஞ்சிபுரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி விலகத் திட்டமிட்டிருந்தது என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சிப்பொதுச் செயலாளர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சி குறித்து அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டி வந்தது. பின்னர் கருணாநிதியைக் குற்றம் சுமத்தி கூட்டணியிலிருந்து விலகிஅ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.
தற்போது தி.மு.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் சேருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சேபணை தெரிவிக்காது. அ.தி.மு.க.வுடன் பா.ம.க.சேர்ந்த பிறகும் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு பா.ம.க.வந்ததைகாங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
சாதிய கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வருவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சேபிக்காது. தி.மு.க. கூட்டணிக்கு எந்தக் கட்சிவேண்டுமானாலும் வரலாம்.
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டதால் 2 மத்திய அமைச்சர் பதவிகள் காலியாகி உள்ளது. அந்தப் பதவிக்குபாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க ஒருபோதும் வலியுறுத்தாது. பிரதமர் வாஜ்பாய் என்ன முடிவு எடுக்கிறாரோஅதை நாங்கள் பின்பற்றுவோம் என்றார் இல. கணேசன்.
யு.என்.ஐ.