For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் வருகை ... கோவையில் தீவிர பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதேசிப் பொருட்கள் கண்காட்சியைத் துவக்கி வைக்க பிரதமர் வாஜ்பாய் வரும் பிப்ரவரி 16ம் தேதி கோவை வருகிறார். தேசிய மார்க்கெட்டிங் கமிட்டி,மற்றும் சுதேசி ஜனரஞ்ச் ஆகிய இயக்கங்கள் இணைந்து கோவையில் இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

இந்தக் கண்காட்சியில் அந்நியப் பொருட்கள் விற்பனையை எதிர்த்து கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இதனை பிரதமர் வாஜ்பாய் துவக்கிவைக்கிறார். நான்கு நாள் நடக்கும் இந்தப் பொருட்காட்சியில் மத்திய, மாநல அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் மத்தியஅமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதால், போலீசார் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதில், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், மத்திய ஊரகத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய விளையாட்டுத்துறைஇணை அமைச்சர் உமாபாரதி, வனத்துறை அமைச்சர் டி.ஆர் பாலு, மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் கண்ணப்பன், மத்திய இளைஞர் நலத் துறை இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரயில்வே இணை அமைச்சர் ஓ. ராஜகோபால், மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் மனோகர் ஜோஷிமற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவை வரும் பிரதமர் வாஜ்பாய், ஒரு மணிநேரம் பொருட்காட்சி வளாகத்தில் பேட்டரி கார் மூலம் ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்வையிடுகிறார்.பின்னர், கோவையில் கட்டப்பட்டுள்ள ஜெகநாதர் ஆலயத்திற்குச் செல்கிறார். அடுத்து மாலையில் பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில்கலந்து கொள்கிறார். மேலும், வ. உ. சி பூங்காவில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X