9 முறை நடுங்கியது கட்ச்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடர்ந்து 9 முறை 4.0 என்ற ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து இந்திய பூகம்பவியல் துறை அதிகாரிகள் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை காலை 5.10மணி வரை 3.1 மற்றும் 4.0 என்ற ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து கட்ச் மாவட்டத்தில் இதுவரை 286 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அகமதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர்காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications