யூதர்கள் மீது பாலஸ்தீனர் தாக்குதல் .. 8 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

அசூர் (இஸ்ரேல்):

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பஸ் நிலையத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடத்தில், பஸ்சில் வந்தபாலஸ்தீனியர் ஒருவர், கூட்டத்தினரை நோக்கி பஸ்சால் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் இறந்து போனவர்களின் சடலங்களும், அவர்கள்அணிந்திருந்த ஷூக்களும் கிடந்தன.

டெல் அவிவ் உயர் போலீஸ் அதிகாரி யோசி சிட்போம் கூறுகையில், பாலஸ்தீனியர்களின் நாசச் செயல் இது. 8 பேர் இறந்துள்ளனர். பலர்காயமடைந்துள்ளனர் என்றார்.

இஸ்ரேல் அரசு அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள், செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் சென்று, காரில் சென்ற பாலஸ்தீன அதிபர்யாசர் அராபத்தின் பாதுகாவலர் மசூத் அயாத் என்பவரைக் கொலை செய்தனர். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

டெல் அவிவில் 8 பேரைக் கொன்ற இந்த பஸ், பயணிகள் பஸ்சுக்காகக் காத்திருந்த காலை வேளையில் மோதியது. மோதிய பிறகு, பஸ் போனதும்போலீஸார் சில கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திக் கொண்டு சென்றனர். இருப்பினும் அந்த பாலஸ்தீனரை பிடிக்க முடியவில்லை.

கடந்த செப்டம்பர் முதல் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 400 பேர்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 300 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். 61 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இஸ்ரேலில்வாழும் அரபு நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+