சசிகலாவைப் பிரிவாரா ஜெயலலிதா?
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், சசிகலா போன்றவர்களைத் தன்னுடன்வைத்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
சென்னையில், செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள்சந்திப்பின்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜெயலலிதா.
அப்போது, கடந்த முறை முதல்வராக இருந்தபோது, சசிகலா உள்பட பலரைச் சேர்த்துக்கொண்டதால், ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டது என்று கூறினீர்கள். அதுபோலஇப்போதும் நடக்குமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அக்கேள்விக்க பதிலளிக்க மறுத்த ஜெயலலிதா, இது திசை திருப்பும் கேள்வி என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், வேட்பாளர் தேர்வுக்கு நேர்முக தேர்வு நடைபெறாது.விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில்தான் வேட்பாளர்தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.