பிரச்சனையில் பைக் விளம்பரம்
பா.ஜ.க., சில எதிர்க்கட்சிகள் கூறுகிற குற்றச்சாட்டை ஜனாதிபதியும் கூறினால், பிரச்சனையே அரசியலாக்கப்பட்டு விடுகிற சூழ்நிலை உருவாகிவிடும் - என்று தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மற்ற எதிர்க் கட்சியினரும், ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? பா.ஜ.க. செய்வது அநியாயம். ஜனாதிபதிவிமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கூறியிருக்கிறன.
முதலில் ஓர் அடிப்படை விஷயத்தை பார்க்க வேண்டும். அரசை எச்சரிப்பதும், அரசுக்கு ஆலோசனை சொல்வதும், ஜனாதிபதியின் உரிமைகள். ஆனால் இதைபொது மேடையிலிருந்து அவர் செய்வது முறையல்ல.
அரசுக்கு, தான் விடுக்கும் எச்சரிக்கைகளை ஒரு ஜனாதிபதி, பொது மேடைப் பேச்சாக வகுத்தளித்தால்,அப்போது அந்தப் பேச்சு பொதுவிமர்சனத்திற்குட்பட்டுத்தான் தீரும். இது தவிர்க்க முடியாதது.
எதிர்க்கட்சிகள் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று ஜனாதிபதி நினைத்தால், அவர் பிரதமரை அழைத்து அவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.அதை விடுத்து தன் கருத்தை பொது மக்களிடம் கூற அவர் முற்பட்டால் பொது மக்களிடம் தங்கள் கருத்தைக் கூறுவது ஆளும் கட்சிக்குமு அவசியமாகிவிடும். இப்போது இதுதான் நடந்திருக்கிறது.
ஜனாதிபதியின் கருத்துக்கள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. அநத் விமர்சனத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமே ஒழிய,அப்படிவிமர்சனமே இருக்கக் கூடாது என்பது ஜனநாயகத் தத்துவம் அல்ல.
அரசியல் சட்ட மறு ஆய்வுக்குரிய நேரம் இதுவல்ல என்ற கருத்தை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்: இந்த மறைமுகத் தேர்தல் யோசனையும்நம்மால் முடியாததே. அது ஒருபுறமிருக்க, அரசியல் சட்ட மறு ஆய்வுக்குழு, ஆலோசனை கூறும் அதிகாரம் படைத்ததே ஒழிய, அரசியல் சட்டத்தை மாற்றிவிடும் அதிகாரம் கொண்டது அல்ல.