அசாமில் 3 உல்பா தீவிரவாதிகள் கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாமில் மூன்று உல்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
தின்சுகியா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 உல்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்தஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அம்மாவட்டத்தின் திஹிங் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைபாதுகாப்பு படை தாக்கியதில் ஒரு உல்பா தீவிரவாதி கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த எந்திர துப்பாக்கிகைப்பற்றப்பட்டது.
சோனிப்பூர் மாவட்டத்தில், என்.டி.எப்.பி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியான பாபேன் பஹலாரி கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த பிரேஸில் நாட்டு கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டன என அரசு வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications