பா.ஜ.க.வுடன் கூட்டணியா ? மறுக்கிறது அ.தி.மு.க.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அ.தி.மு.க. ஒருபோதும் முயலவில்லை என்று அ.தி.மு.கஅமைப்புச் செயலாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போதே அதன் மத வெறிப் போக்கைக் கண்டித்தும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும்அதிலிருந்து விலகினார் ஜெயலலிதா.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அ.தி.மு.க விரும்புவதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.க விரும்புகிறது என்று வெங்கையா நாயுடு கூறியிருப்பது நகைப்பிற்குரியது.
பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளதுஎன்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் தம்பிதுரை.
ஐ.ஏ.என்.எஸ்.