மூப்பனாரிடம் தூது சென்ற சோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பாரை, துக்ளக் பத்திரிக்கை ஆசியரியர் சோ 2 வது முறையாகச் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.கவுடன், த.மா.கா கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் மூப்பனாரைசந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் அவர் ஜெயலலிதாவையும் இதுகுறித்து அடிக்கடி சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே வியாழக்கிழமை மீண்டும் மூப்பனாரைச் சந்தித்துப் பேசி சோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மூப்பனாரை சந்தித்துப் பேசினேன்.

அவரிடம் தேசிய அரசியல், அயோத்தி விவகாரம், பட்ஜெட், வீரப்பன் விவகாரம் ஆகியவை குறித்துவிவாதித்தேன். ஜெயலலிதாவை ஏற்கனவே 2 முறை சந்தித்துப் பேசினேன். இனிமேலும் சந்தித்துப் பேசுவேன்.

மூப்பனாருக்கு தேர்தல் ஆலோசனை எதுவும் நான் கூறவில்லை. அவர் உருப்படும் வழியை விட்டு விட்டு நான்சொல்லும் ஆலோசனையையா கேட்பார்? என்றார் சோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+