கூட்டணியிலிருந்து விலக கருணாநிதியே காரணம் .. பாமக
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தங்கள் கட்சி தே.ஜ.கூட்டணியிலிகுவந்து விலகியதற்கு காரணம்தி.மு.க.தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தைகேட்டுள்ளார். நான் கூட்டணியை விட்டு விலகியதற்கான காரணத்தை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும்விளக்கி கூறி விட்டேன். பா.க.ம.வுக்கு தே.ஜ.கூட்டணியுடன் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வுடன் தான்பிரச்சனை.
நான் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் நானும், வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒரே கூட்டணியில் நீடிக்க முடியாதுஎன கூறியிருந்தேன். அதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி கூட்டணியில் இருக்க வேண்டும் என மத்திய தே.ஜ. கூட்டணிதலைமை கூறியிருப்பதாக பதிலளித்தார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருப்பவர்கள் பலமிழந்து பூஜ்யமாகி விடுவார்கள்.
பா.ம. க தொண்டர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது. கட்சி தொண்டர்கள் இனி மேல் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications