அவரும் பேசினார்...நாங்களும் பேசினோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சோனியா காந்தியின் தூதர்கள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைசந்தித்தது தேர்தல் கூட்டணி குறித்து 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரவிருக்கும் சட்டசபையில் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து அனைத்துகட்சிகளும் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. ஜெயலலிதா தலைமையிலானமதசார்பற்ற கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் தேர்தல்கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்ததை நடத்தி வருகிறது.

முதல் கட்ட பேச்சு வார்த்த நடத்த பிரணாப் முகர்ஜி வந்து சென்றார். திங்கள்கிழமைஇரண்டாவது கட்ட பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் முகர்ஜியுடன் குலாம் நபிஆசாத்தும் வந்துள்ளார்.

இவர்கள் திங்கள்கிழமை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து 1மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை குறித்து நிருபர்கள் கேட்டபோது, பேச்சு வார்த்தை குறித்து நாங்கள் கட்சி தலைவர் சோனியாகாந்தியிடம்தெரிவிப்போம். அவர் இறுதி முடிவெடுப்பார்.

நாங்கள் எங்கள் கருத்துக்களை சொன்னோம். ஜெயலலிதா அவரது கருத்தைசொன்னார். நாங்கள் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டார். அவர் சொன்ன கருத்தைநாங்கள் கேட்டோம்.

காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் பாண்டிச்சேரி நிலைமை உள்ளிட்ட அனைத்துபிரச்சனை குறித்தும் நாங்கள் பேசினோம். இந்த பேச்சு வார்த்தையில் மகிழ்ச்சி என்றகேள்விக்கோ, வருத்தம் என்ற கேள்விக்கோ இடமில்லை என்றனர்.

பேச்சுவார்த்தையின் விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+