வீரப்பனை விரைவில் பிடிப்போம்: கர்நாடகம்
சித்ரதுர்கா:
சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சந்தன கடத்தல் வீரப்பனை விரைவில் பிடித்து விடுவார்கள் என கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். வீரப்பனை பிடிப்பதற்கான என காலவரையறைஎதையும் கூற முடியாது. அதிரடிப்படையினர் வீரப்பன் கும்பலை பிளவு படுத்தி விட்டனர் என கார்கே கூறினார்.
சித்ரதுர்காவில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பார்வையிட வந்த கார்கே நிருபர்களிடம் கூறுகையில், கான்ஸ்டபிள்களை பணி நியமனம் செய்வதற்கு இருந்த தடைநீக்கப்பட்டுள்ளதால் காவல்துறை கண்காணிப்பாளர்கள், கான்ஸ்டபிள்களை நியமனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். எத்தனை பேரைநியமனம் செய்வது என்பது குறித்து எஸ்.பி.க்கள் முடிவு செய்வார்கள்.
குற்றங்களின் அளவை குறைக்க போலீசார் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். போலீசாருக்காக 5,000 குடியிருப்புகள் இன்னும் 4ஆண்டுகளில் கட்டி கொடுக்கப்படும். இதற்கான நிதி உதவி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து (ஹட்கோ) பெறப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.