குஜராத்தில் 6 முறை நிலநடுக்கம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்தியபூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.0 மற்றும் 4.1 என்றரிக்டர் அளவுகளில் கட்ச் மாவட்டத்தில் அதிகாலை 2.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு 388 முறைசிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, திங்கள்கிழமையும் கட்ச்மாவட்டத்தில் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் நிலநடுக்கம்:
வியட்நாமில் உள்ள லாய் சாவ் என்ற நகரில் 5.3 என்ற ரிக்டர் அளவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம்ஏற்பட்டது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து வியட்நாமில் வெளியாகும் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், லாய் சாவ் மாகாணத் தலைநகர்டெயின் பெயின் போவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் வீடுகளில்இருந்தவர்கள் காயமடைந்தனர் என்று வெளியாகியுள்ளது.