சென்னையில் 5 கிலோ ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சிபி சிஐடி பிரிவின் போதை பொருள் தடுப்பு போலீசார் ரூ 5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹெராயின்போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மூலம், தமிழ்நாடு ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் என்பவரிடம் ஹெராயினைக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
ஹெராயினை வாங்க முயற்சித்த போது ஜாபரைப் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 3பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications