ஆஸ்திரேலியாவை வெல்வோம்: இந்தியா நம்பிக்கை
டெல்லி:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வது உறுதி. அது 2-1 என்ற கணக்கிலா அல்லது 1-0 என்ற கணக்கிலா என்பதுதான் பிரச்சனையே என்கிறார் இந்திய அணியின் புதிய மேலாளரான ராஜேஷ் செளகான்.
40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய ராஜேஷ் செளகான், தற்போதைய ஆஸ்திரேலியா போட்டிக்காக இந்திய அணியின் மேலாளராகநியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இந்தியா அப்ராட் நியூஸ் சர்வீசுக்கு அளித்த பேட்டியில் செளகான் கூறிய கருத்துகள்:
எளிதில் வெற்றி பெற உதவும் அனில் கும்ப்ளே அணியில் இல்லையென்றாலும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் தரக்கூடிய சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்தியா வெற்றி பெறுவதில் சந்தேகமில்லை.
எஸ்.ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ் துவக்க ஜோடி உள்பட இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியினரை காட்டிலும் திறமையுடன் உள்ளனர்.
அணியின் மேலாளர் என்ற வகையில் அணியின் வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.அணிவீரர்களின் உடன்பிறவா சகோதரனாகவே இருந்து அவர்களை அரவணைத்து செல்வேன்.
அணியினர் அனைவரையும் மதித்து அவர்களின் கருத்தறிந்து நடந்து கொள்வுது அவசியம். அதே போல் வீரர்கள் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதியளிக்கப்படும். ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவதுபோன்ற செயல்களை வீரர்கள் மறுக்கக்கூடாது.
மீண்டும் இந்திய அணியில் வேறு வகையில்(மேலாளராக) இடம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் மேலாளராக நியமிக்கப்படுபவர் தன்னைநிலைநிறுத்தி கொண்டு திறமையுடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக குறைந்தது ஒரு வருட காலத்திற்காவது நியமிக்கப்பட வேண்டும் என தனது ஆதங்கத்தைவெளிப்படுத்தினார் செளகான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications