For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் தேர்தல் எப்போது?

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாக்குமரி:

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரிக்கு சட்டசபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதுகுறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கன்னியாக்குமரியில்புதன்கிழமை தெரிவித்தார்.

சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து கன்னியாக்குமரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்திநிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்திற்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

வாக்கு எண்ணிக்கை அடுத்த நாளே அறிவிக்கப்படாது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வாக்குஎண்ணிக்கை ஆரம்பமாகும்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி திருச்சியில் இடைத்தேர்தல் ஆகியவை ஒரே நாளில்நடக்கும்.

முடிந்த அளவு பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடத்தமுயற்சித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக, சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா சென்னை உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X