ஜெ. புகாருக்கு தேர்தல் கமிஷன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடக்கவாய்ப்புள்ளது என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ம்ருத்ருஞ்சய் சாரங்கி மறுத்துள்ளார்.

இந்த எந்திரங்களை பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளநிலையில், வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் இந்த எந்திரங்கள் நிச்சயம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் இந்த எந்திரங்களின் செயல்பாட்டை நிருபர்களுக்கு புதன்கிழமை விளக்கிக் காட்டிய சாரங்கி கூறுகையில்,

மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல்செய்துள்ள வழக்கை எதிர்த்து இந்திய தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்யும்.

இந்த எந்திரங்களை பயன்படுத்துவதால் முறைகேடுகள் எதையும் செய்ய முடியாது, கள்ள ஓட்டு போட முடியாது. யாருடையவாக்கையும் திருத்த முடியாது. இந்த எந்திரங்கள் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

வழக்கமாக வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப் போடும்போது என்னென்ன விதிமுறைகள் கையாளப்படுமோ அவை தான் இங்கும்கையாளப்படும். வாக்குச் சீட்டு-பெட்டிக்குப் பதில் எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான். வாக்குப் பதிவுமையத்தில் உள்ள அதிகாரி பட்டனை அழுத்துவார். அதன் பின்னர் தான் வாக்காளர்கள் வாக்களிகக முடியும்.

இந்த எந்திரங்கள் சீலிடப்பட்டவை. வாக்குப் பதிவு நடந்த பின்னர் ஒரு வருடம் வரை தேர்தல் முடிவுகளை அதில் பத்திரப்படுத்திவைக்க முடியும்.

இந்த எந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிமதுரையில் பிப்ரவரி 26ம் தேதி நடக்கும்.27ம் தேதி திருச்சியிலும், 28ம் தேதி சென்னையிலும் இந்தப் பயிற்சி நடக்கும்.

28ம் தேதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே இந்தஎந்திரங்கள் வாக்குப் பதிவு மையங்களில் வைக்கப்படும். இதனால், வாக்களார்கள் இந்த எந்திரங்களை முன்னதாகவே பார்த்துக்கொள்ளவும், அதன் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளவும் முடியும் என்றார்.

இந்த எந்திரரங்களைத் தயாரித்துள்ள பாரத் எலெக்ட்ரானிஸ் நிறுவனத்தின் துணை மேலாளர் காணிக்கராஜ் கூறுகையில், இந்தஎந்திரத்தில் யாரும் ஒரு முறைக்கு மேல் ஓட்டு போட முடியாது. இவை பேட்டரியால் இயங்குபவை. இதனால் வாக்குப் பதிவுமையத்தில் மின் இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

இந்த எந்திரத்தில் 64 வாக்காளர்களின் பெயர்கள், சின்னங்கள் வரை வைத்திருக்க முடியும். அதிகபட்சம் 3,824 பேர் வாக்களிக்கமுடியும். ஒரு வாக்குச் சாவடியில் 1,500 பேருக்கு மேல் ஓட்டுகள் இருப்பதில்லை.

வாக்குப் பதிவு முடிந்த பின்னர் கடைசியாக ஒரு பட்டன் அழுத்தப்படும். இதற்குப் பின்னர் யாருமே இதில் வாக்குகளை பதிவுசெய்ய முடியாது. தேர்தல் ஏஜெண்டுகள் இந்த கடைசி பட்டன் அழுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.தமிழகத்தில் மொத்தம் 68 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+