தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்
சென்னை:
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆலோசனை செய்யுமாறு அரசியலமைப்புச் சட்ட மறுபரிசீலனை ஆய்வுக்குழுவிடம் பிரதமர்வாஜ்பாய் பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் கூறப்பட்டிருப்பது போல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி போல் தமிழ் உள்பட இந்தியாவில் உள்ளபிற மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு இரண்டு முறை கடிதம்எழுதியிருந்தார்.
அதாவது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி 1996 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனும், அதற்குப் பிறகு 2000 மாவது ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல்மாதம் இரண்டு முறை பிரதமர் வாஜ்பாய்க்கு இதுகுறித்துப் பரிசீலனை செய்யுமாறு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கோரிக்கை குறித்து பிரதமர் வாஜ்பாய் ஆலோசித்து முதல்வர் கருணாநிதிக்குக் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழக முதல்வர்கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதை விசாரிக்கக் கோரி இந்தியஅரசியலமைப்பு சட்ட மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications