இந்தியாவிற்கு அணுசக்தி எரிபொருள் சப்ளை செய்ய ரஷ்யா உறுதி
மாஸ்கோ:
இந்தியாவின் அணுமின்சக்தி உற்பத்திக்கான எரிபொருள் சப்ளையை ரஷ்யா எக்காரணம் கொண்டும் நிறுத்தாது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறைஅதிகாரியான அலெக்ஸாண்டர் அலெக்ஸெயேவ் தெரிவித்தார்.
அணு எரிபொருள் சப்ளை நாடுகளின் கூட்டமைப்பின் விதிமுறைகள் ரஷ்யா மீறுவதாக கூறுவது தவறு. அக்கூட்டமைப்பின் விதிமுறைப்படி, சர்வதேச அணுசக்திஅமைப்பின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா அணு
எரிபொருள் சப்ளை செய்கிறது.
ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு, அமெரிக்காவின் தற்போதைய புஷ் நிர்வாகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவை, வடகொரியா, ஈராக்போன்ற நாடுகளுடன் இணைத்து கருத்து வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இணைத்து வெளியிட்டு இருப்பதன் மூலம் இந்தியாவை தீவிரவாத நாடாக கருதுவதற்கு இடமில்லை. அவ்வாறு கருத்து வெளியிட்டால் ரஷ்யாபொருத்துக்கொள்ளாது என மாஸ்கோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்