தள்ளாத வயதிலும் தளராத முயற்சி

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்:

அன்னை தெரஸாவிற்கு நினைவுப்பூங்கா கட்டுகிறார் 77 வயதான சியாட்டில் நகரப் பெரியவர் ஒருவர்.

முன்னாள் கட்டிட காண்ட்ராக்டரான டாமினிக் காஸ்போடர் என்ற கத்தோலிக்க பெரியவர், ஏழைகளுக்கு தொண்டுசெய்து நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவின் தொண்டால் ஈர்க்கப்பட்டவர். 1997ம் ஆண்டு மறைந்தஅன்னை தெரஸாவின் நினைவாக நினைவு பூங்கா ஒன்றை சியாட்டில் நகருக்கு வெளியே அமைக்கிறார்காஸ்போடர்.

10 ஏக்கர் நிலத்தில் அமையும் இந்த நினைவுப் பூங்காவின் மையத்தில் அன்னை தெரஸாவிற்கு நினைவு மண்டபம்கட்டப்படும். கோபுரவடிவில் அமையும் இதன் உயரம் 137 அடியாக இருக்கும். இம்மண்டபத்தில் அன்னைதெரஸாவின் சிலையுடன் இயேசு கிறிஸ்துவின் சிலையும் இடம் பெறும்.

இதன் ஒரு பக்கத்தில் அமையும் 100 அடி உயரமுள்ள தூண் போன்ற நினைவுச் சின்னம் அமெரிக்காவில்குடியேறியவர்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பூர்வகுடியின மக்களின் (செவ்விந்தியர்களின்) நினைவாகஎழுப்பப்படுகிறது.

மற்றொரு பக்கத்தில் எண்கோண வடிவில் யூத படுகொலைக்கான நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது.

இந்த நினைவு மண்டபங்களுக்காக இதுவரை காஸ்போடர் 2,50,000 டாலர்களை செலவழித்துள்ளார். மேலும்50,000 டாலர்கள் வரை செலவு செய்யவுள்ளார்.

காஸ்போடர் வடிவமைத்த நினைவு மண்டபத்தின் மாடலை ஓரெகான் மாகாண நிர்வாகம் முதலில் நிராகரித்துவிட்டது. எனினும், அதே மாடலில் தான் தற்போதைய நினைவுமண்டபம் கட்டப்படுகிறது. இது குறித்து கருத்ததெரிவித்த காஸ்போடர், சிறந்த படைப்புகள் சில நேரங்களில் நிராகரிக்கப்படுவதுண்டு என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+