மூப்பனாருக்கு எஸ்.டி.எஸ். யோசனை
சென்னை:
எஸ்.டி.எஸ். ஞாபகம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்து,பிரிந்து சென்று, ஜெ. கோஷ்டியில் இருந்து, அமைச்சராகி, பின்னர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அதிமுக என்று ஒரு கட்சியை தானே ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்தக்கட்சிக்கு இன்னொரு மாஜி மந்திரி ராஜாராம் தலைவராக இருக்கிறார்.
கொஞ்சம் காலமாக அரசியலே பேசாமல் சன்யாசம் வாங்கியிருந்த அவர் தேர்தல்வருவதால் மீண்டும் அரசியலில் குதித்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை அவரும் ராஜாராமும் அளித்த பேட்டி:
த.மா,காவும், காங்கிரசும் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும். மிகச் சிலதொகுதிகளை பெற்றுக் கொண்டு ஊழல் கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணிஅமைக்கக் கூடாது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்து அதற்கு தலைமை ஏற்க சரியான, சிறந்ததலைவர் மூப்பனார் தான். தமிழகத்தில் இருக்கும் 35 சதவிகித மக்கள் தி.மு.க.,அ.தி.மு.க. ஆட்சியால் வெறுப்படைந்து இருக்கிறார்கள்.
மக்கள் மாற்று அரசை எதிர்பார்க்கிறார்கள். த.மா.காவும் காங்கிரசும் இணைந்துமூன்றாவது அணி அமைத்தால் அது முடியும்.
த.மா.காவும், காங்கிரசும் தங்கள் கொள்கைகளை விட்டுத் கொடுத்துவிட்டுஅ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது.
இடது சாரியினர் எப்போதும் ஊழலை எதிர்த்து போராடி வருகின்றனர். எனவேஅவர்களும் ஊழல் அ.தி.மு.கவிலிருந்து விலக வேண்டும்.
எங்கள் கட்சி இப்போது புதிய நீதிக் கட்சிதலைவர் சண்முகம் தலைமையில்அமைந்துள்ள தமிழ் நாடு தேசிய முன்னணியில் இருக்கிறது மூன்றாவது அணிஅமையாவிட்டாலுமம் நாங்கள் தி.மு.க. தலைமையிலான அணியில் இணையமாட்டோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications