சென்னையில் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் கூட்டம்
சென்னை:
கிரிக்கெட் ஊழல் தொடர்பாகவும், வாரிய உறுப்பினர்கள் தொடர்பாகவும் கடந்தாண்டு பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வந்த இந்தியகிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய முன்னாள் தலைவர் இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மீதான ஒழுங்கு நடவடிக்கை பற்றி முடிவு செய்ய சென்னையில் வாரியத்தின் சிறப்புபொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்பிக் வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா டெல்லியில் ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற வாரியத்தின் காரியக்கமிட்டிகூட்டத்தில் பங்கு பெறவில்லை.
காரியக்கமிட்டி, அணியின் வீரர்கள் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். வாரியத்தின் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லைஎனக்கூறி பிந்த்ரா மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை பொதுக்குழுகூட்டத்தில் முடிவு செய்ய தீர்மானித்திருந்தது.
பிந்த்ராவும் பஞ்சாப் கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஒருவரையும் விசாரித்த வாரியத்தின் ஒழுங்குநடவடிக்கை குழு தனது அறிக்கையை வாரியத்திடம் அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என வாரியத்தின் தலைவர் ஏ.சி.முத்தையாடெல்லி கூட்டத்திற்கு பின் தெரிவித்திருந்தார்.
சென்னைக் கூட்டத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிரிக்கெட் ஜாம்பவன் சுனில் கவாஸ்கர் அளித்த விலகல் கடிதம்பற்றியும் முடிவு செய்யப்படவுள்ளது.
அகாடமியின் வளர்ச்சிக்காக 1.74 கோடி ரூபாய் நிதியை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. பயிற்சியாளர்களுக்கான பயிலரங்கம் நடத்தவும், பயிற்சி முறைகள்குறித்த கருத்தரங்குகள் நடத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
யு.என்.ஐ.