திருச்சி: விபத்துக்கள் 2 சாவு 4
திருச்சி:
திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் புதன்கிழமை மாலை நடந்த இரண்டு சாலை விபத்துகளில் ஒரு பெண் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர்காயமடைந்தனர்.
இந்த விபத்துகள் குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு அருகே இருக்கும் உடையான்பட்டி கிராமத்திற்கு அருகேபுதன்கிழமை பிற்பகல் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார்.
இறந்தவர்கள் டிராக்டரின் ஓட்டுநர் ஜோசப் (30), ஜோதிம் அனி (25) மற்றும் ரத்தினம் (25) என அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விபத்தில்காயமடைந்த கந்தசுவாமி (27) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவரங்குறிச்சிக்கு அருகே வியாழக்கிழமை காலை சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென சாலையை கடந்த பெண் மேல்மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது எதிரே வந்த பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டார். 10 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக என போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.