மாறன் கைதில் சந்தேகம் வேண்டாம்: டிஜிபி
சென்னை:
வீரப்பனின் கூட்டாளியும், தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவருமான மாறன் கைதில் யாரும் சந்தேகம் அடைய வேண்டாம் என்று கூடுதல் போலீஸ்டி.ஜி.பி குமாரசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் கூடுதல் டிஜிபி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாறன் பிப்ரவரி 2 ம் தேதியே கைது செய்யப்பட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதளவும் உண்மையில்லை.
குள்ளன்சாவடி போலீஸ் நிலையத் தாக்குதலில் மாறன் ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர். இதில் இவரது கூட்டாளிகளையும் போலீஸார்தேடி வந்தனர்.
தமிழ்நாடு, கர்நாடக கூட்டு அதிரடிப்படை க்யூ பிரிவு போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகுதான் மாறன் பிடிபட்டிருக்கிறார். மேலும்மாறனைப் பிடிப்பதற்கு சத்யமங்கலம் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களும் உதவி புரிந்தார்கள்.
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும். மாறனைப் போலீஸார் பிடிக்கும் போது அவருடன்சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம் என்றார் குமாரசாமி.
முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிப்ரவரி 2 ம் தேதியே மாறனை போலீஸார் கைது செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.