குழந்தை வரம்: குரும்பர் இனத்தின் வினோத பழக்கம்
பூச்சியூர்(கோயம்புத்தூர்):
குழந்தை வரம் தருபவராக பூச்சியூர் கோவில் பூசாரிகளை கருதுகின்றனர் குரும்பர் இன மக்கள்.
கோவை மாவட்டத்தில் பூச்சியூர் கிராமத்தில், சிவராத்திரிக்கு மறுநாள் மஹாலெஷ்மி, வீரபத்திரன், வேட்டைகாரன்சாமிகள் உள்ள உள்ளூர் கோயிலில் குழந்தை வரம் வேண்டும் குறும்பர் இனப் பெண்கள் கூடுவர்.
முதலில் குறும்பர் இன ஆண்களில் 5பேர் தங்கள் தலையால் தேங்காய்களை உடைத்தபின், குழந்தை வரம்வேண்டும் பெண்கள் அனைவரும் தரையில் படுப்பர். பின்னர் அவர்கள் மீது பூசாரிகள் ஆணிசெருப்பை அணிந்துநடக்கின்றனர்.
இந்த செருப்பில் ஆணியின் கூர்முனை மேல்நோக்கி இருக்கும். அவை அழுத்துவதால் பாதிக்கப்படுவதுபூசாரிகளின் பாதமே. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மஹாபூஜை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் குரும்ப இனத்தில் வேலி, பெரியா, சிறியா என்ற மூன்று பிரிவுகள் உண்டு.இவர்களில் பெரியா, சிரியா பிரிவினர் சகோதர உறவுடையவர்கள். எனவே அவ்விரு இனத்திற்கிடையேதிருமணம் நடைபெறாது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications