For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாறனை தடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் தீவிரவாத அமைப்பான தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவரான மாறனை இந்த மாதம் 27-ம் தேதி தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தடா நீதிமன்ற நீதிபதி சின்னபாண்டி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடலூர் மற்றும் விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மாறன் 1993-ம் ஆண்டு குள்ளன்சாவடி காவல் நிலையத்தை தாக்கிய சம்பவத்திலும், பேரணி ரயில்வே நிலையத்தைத் தாக்கிய சம்பவத்திலும்தொடர்புடையவர்.

இவர், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர். இவர் சமீபத்தில் சிறப்பு அதிரடிப் படை வீரர்களால்கோவை அருகே காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

தாளவாடி போலீசார் சந்தன வீரப்பன் குறித்து மாறனிடம் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் சத்தியமங்கலம் மாஜிஸ்டிரேட்மாறனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதன்படி மாறன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X