செயின்ட் கிட்ஸ் வழக்கில் வி.பி.சிங் மகன் ஆஜர்
டெல்லி:
செயின்ட் கிட்ஸ் தீவில் தான் வங்கி கணக்கு எதுவும் துவங்கவில்லை என முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன்அஜேயா சிங் தெரிவித்துள்ளார்.
செயின்ட் கிட்ஸ் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில், நீதிபதி பாரிஹோக் முன்னிலையில் அஜேய சிங்தெரிவித்த தகவல்கள்:
1989ல் செயின்கிட்ஸ் தீவில் உள்ள பர்ஸ்ட் ட்ரஸ்ட் கார்ப்போரேஷன் வங்கியில் தன் பெயரில் வங்கி கணக்குதுவங்கப்பட்டு தனது தந்தையின் சார்பாக அந்த வங்கிக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுவதை மறுத்தார்.
இது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தியை அடுத்து இந்தியா வந்து சம்பந்தப்பட்ட பத்திரிகையில் மறுப்பு செய்திவிட்டபோதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.அமலாக்கத்துறை அதிகாரி அருண் சர்மா முன்னிலையில் இதற்கு தகுந்த பதிலளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வங்கியை சேர்ந்த மக்லீயான், பைரோன் ஆகியோர் பற்றி தனக்கு தெரியாது. அஜேய சிங் என்றபெயரில் உள்ள வங்கிகணக்கில் மேற்கொள்ளப்பட்ட வங்கி நடவடிக்கைகள் பற்றியும் தெரியாது. அந்த கணக்கைதுவக்கியதற்கான பத்திரங்களில் தனது கையெழுத்தோ அல்லது தனது தந்தையின் கையெழுத்தோஇடம்பெறவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாககுற்றம்சாட்டப்பட்டுள்ள சந்திராசாமி மற்றும் மாமாஜி என்ற அகர்வால் ஆகியோர் மீதான இந்த வழக்கில் முன்னாள்பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரிக்கும் பங்குண்டு என்பதற்கானஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
வி.பி.சிங்கின் பெயரைக் கெடுக்க அவரது மகன் பெயரில் சந்திராசாமி தான் செயிண்ட் கிட்ஸ் தீவில் வங்கிக்கணக்கை ஆரம்பித்ததாக புகார் கூறப்படுகிறது. இவருக்கு அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தநரசிம்மராவ் உதவியதாகத் தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications