சவுதியில் குவியும் ஹஜ் பயணிகள்
சவுதி அரேபியா:
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளுதல் தற்போது தொடங்கியுள்ளது.
இந்தாண்டு மார்ச் 3 ம் தேதி தொடங்கும் 5 நாள் மதச்சடங்கிற்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித பயணமாக சவுதி வந்துள்ளதாகஅந்நாட்டு உள்துறை அமைச்சரான இளவரசர் நாயேவ் தெரிவித்துள்ளார்.
மெக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கான வசதிகளை பார்வையிட்டபின், ஞாயிறன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஹஜ் பயணிகள்பாதுகாப்பான முறையில் புனித பயணத்தை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இதுவரை 180 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு , தீயை அணைக்கதேவையான நீரை மலைப்பகுதியில் சேமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கடந்த 1997 ம் தேதி ஹஜ் கூடாரங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 343 பேர் பலியாகினர். 1998ம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது நெரிசலில் சிக்கி 119 பேர்
பலியாகினர். இதனையடுத்து சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால் கடந்த இரு ஆண்டுகள் ஹஜ் பயணம் அமைதியாக நடைபெற்றது.
இஸ்லாத்தின் 5வது கடமையான வசதி உள்ளோர் மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி மார்ச் 4 ம்தேதி மவுண்ட் அராபத்தில் நடைபெறும்வழிபாடாகும்.
இங்கு தான் முகமது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன் தனது கடைசி நற்செய்தி கூட்டத்தில் பேசினார். ஹஜ்ஜிற்கு வரும் பயணிகள் தாங்கள் செய்த பாவங்களைஇறைவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக இப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகின்ற இம்மாதத்தில் நடைபெறும் தியாக பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு வகைஉதவிகளை வசதியுள்ள முஸ்லீம்கள் வழங்குவர்.
இந்திய ஹஜ் குழு: காஷ்மீர் முதல்வர் தலைமையில் ஜெட்டா வந்த 17 நபர் இந்திய ஹஜ் குழுவை சவூதிக்கான இந்திய தூதர் தல்மிஸ் அஹமது வரவேற்றார்.
ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அலுவலக செய்திகுறிப்பில், இக்குழு சவூதியின் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திப்பதோடு ஹஜ் வரும் இந்தியபயணிகளையும் சந்திக்கிறது.
இந்தியாவிலிருந்து வரக்கூடிய 1லட்சத்திற்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகளில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய அரசின் மத்திய ஹஜ் குழு மூலமும்மற்றவர்கள் தனிப்பட்ட ஏற்பாடுகளின் மூலமும் ஹஜ் பயணம் மேற்கொள்வர்.
ஹஜ் பயணத்திற்கு வரும் இந்திய பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்ய ஜெட்டா அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதாகஅச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.