காஷ்மீர் பிரச்சனையும் காயிதே மில்லத்தும்
சென்னை:
காயிதே மில்லத் உயிருடன் இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனை மோசமான நிலையை அடைந்திருக்காது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார் .
சென்னையில், இந்திய முஸ்லீம் லீகின் மறைந்த தலைவர் காயிதே மில்லத் என்றழைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல்நாட்டி பேசிய தமிழக முதல்வர்,
இந்திய பிரிவினையின் முடிவில் காயிதே மில்லத்தை தொடர்பு கொண்ட லியாகத் அலிகான் போன்ற பாகிஸ்தான் தலைவர்களிடம் பாகிஸ்தானில்சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க கேட்டுக் கொண்டவர் மறைந்த தலைவர் அவர். அவர் மேலும் சில காலம் உயிருடன்இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனை மோசமான நிலையை அடைந்திருக்காது.
தமிழின் மீது தணியாத பற்று கொண்ட காயிதே மில்லத் நேரு காலத்தில் நாடாளுமன்றத்தில் உருது மொழியில் பேச சொன்னதற்கு ஆங்கிலமும், உருதும் அந்நியமொழிகள், தமிழே தனது தாய்மொழி எனக் கூறியவர்.
1947-50 காலகட்டத்தில அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக இருந்த அவர் தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர்.
இந்நினைவு மண்டபத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்படுவதால், தேர்தல் ஆதாயத்திற்காக இதனை செய்வதாக நினைக்கக் கூடாது.
இந்திய முஸ்லீம் லீகின் மறைந்த தலைவர்களுள் ஒருவரான அப்துல் சமது இருக்கும் போதே கட்டப்பட வேண்டிய இந்நினைவு மண்டபத்திற்கு சில முஸ்லீம்பெருமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே நினைவு மண்டபம் கட்ட தாமதமேற்பட்டது என தெரிவித்தார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications