சோ - மூப்பனார் மீண்டும் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து துக்ளக் ஆசிரியர் சோவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாரும் திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்
மார்ச் 1-ம் தேதிக்குள் கூட்டணி குறித்து மூப்பனார் அறிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கெடு விதித்துள்ளார்.இதையடுத்து மூப்பனார் வீட்டில், திங்கள்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த மூப்பனார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்ச் 1-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு ஜெயலலிதாகூறியுள்ளார். அதற்குள் முடிவெடுக்க முயற்சிப்போம்.
மார்ச் 1 என்று ஜெயலலிதா கூறியிருப்பது கெடு அல்ல. அதற்குள் முடிவைக் கூறுங்கள் என்றுதான் அவர் கூறியுள்ளார். விரைவில் எங்களது முடிவைத்தெரிவிப்போம். எங்களுக்கும் பல சிரமங்கள் உள்ளன. அவரது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில், தமிழகத்தில் 3-வது அணி வருமா என்று தெரியாது. ஆனால் எங்களது அணி முதலாவது அணியாவே வரும்வாய்ப்புள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸைப் பொத்தவரை எல்லாக் கதவுகளும் திறந்தே உள்ளன. எல்லா வாய்ப்புகள் குறித்தும் விவாதித்து வருகிறோம்.
ப. சிதம்பரம் எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை என்று கூறுகிறார்கள். அது தவறு. ஞாயிற்றுக்கிழமை கூட அவருடன் விவாதித்தேன்என்றார் மூப்பனார்.
சோவுடன் 1 மணி நேரம் ஆலோசனை:
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, அங்கு வந்தார். அவருடன் மூப்பனார் சுமார் 1 மணி நேரம் தனியாக பேசினார். இந்தசந்திப்புக்குப் பிறகு சோவிடம் செய்தியாளர்கள், ஜெயலலிதா விதித்துள்ள கெடு குறித்துக் கேட்டபோது, மூப்பனாருக்காக முதுகு ஒடியும் அளவுக்கு வளையமுடியாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி நேராதவாறு அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாருக்கும் அட்வைஸ் தரும் நிலையில் நான் இல்லை. தரவும் மாட்டேன்.
மூன்றாவது அணி என்பது ஒரு ஜோக் என்று மூப்பனாரே கூறியுள்ளார். எனவே மூன்றாவது அணி அமையுமா என்பது குறித்து நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்றார்.