நெல்லை மாவட்டத்தில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

தென்காசி, இடைகால், நெடுவயல், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நயினாரகத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. சாம்பவர் வடகரையில் சுமார் 10 வினாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்ததாக அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்.

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள்வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் வெளியேறினர்.

செங்கோட்டையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் அச்சம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வீடுகளுக்குள் செல்லவில்லை. லேசான நிலநடுக்கம் என்றுதெரிந்தபின் தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

கலெக்டர் விரைந்தார்:

நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து தெரிந்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தனவேல் மாலையில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலநடுக்கம் குறித்துவிசாரித்தார்.

வடஇந்தியாவில் நிலநடுக்கம்:

முன்னதாக, இந்தியாவின் வடக்குப்பகுதிகளான டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், சண்டீகர், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.7என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+