For Daily Alerts
Just In
தமிழக தற்காலிக கவர்னராக ரங்கராஜன் பொறுப்பேற்பு
சென்னை:
தமிழ்நாட்டின் தற்காலிக கவர்னராக, ஆந்திர பிரதேச கவர்னர் சி. ரங்கராஜன் திங்கள்கிழமை கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஜெயின் கவர்னர் ரங்கராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாநில தலைமை செயலாளர் முத்துசாமி, ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வழங்கிய கவர்னராகப் பொறுப்பேற்பதற்கான அனுமதி உத்தரவை வாசித்தார்.
கவர்னர் ரங்கராஜன் பதவியேற்பு விழாவில், முதல்வர் கருணாநிதி, மேயர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
ரங்கராஜன் தமிழ்நாட்டின் கவர்னராக வரும் மார்ச் 15 ம் தேதி வரை இருப்பார். தமிழக கவர்னர் பாத்திமா பீவி ஹஜ் யாத்திரை சென்றுள்ளதால் ரங்கராஜன்தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, February 26, 2001, 5:30 [IST]