சால்வேடரில் நிலநடுக்கம்
சான் சால்வேடர் (அமெரிக்கா):
சான் சால்வேடரில் ஞாயிற்றுக்கிழமை 4.6 என்ற ரிக்டர் அளவில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2001 ம் ஆண்டு ஏற்கனவே சான் சால்வேடரில் இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.6 என்ற ரிக்டர் அளவிலும், இரண்டாவதுநிலநடுக்கம் 6.6 என்ற ரிக்டர் அளவிலும் உணரப்பட்டது.
இரண்டு நிலநடுக்கங்களிலும் சேர்த்து 1,150 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமையும் சான் சால்வேடரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இந்த நிலநடுக்கங்கள் முதலில் 4.6 என்ற ரிக்டர் அளவிலும் பின்னர் 2.9 மற்றும் 3.7 ரிக்டர் அளவுகளிலும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இப்பகுதியில்வசித்து வரும் 1.2 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினார்கள்.
இதையடுத்து திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சால்வேடரில் 2001 ம் ஆண்டு ஜனவரி 13 ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 13 ம் தேதி மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டது. இதையடுத்து 4,000 முறை சிறிய, சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications