தேர்தல்: ஜெயலலிதாவுக்கு சிவசேனா ஆதரவு
நாகர்கோவில்:
தமிழகத்தில் மத மாற்றத்தை தடை செய்ய சிறப்பு போலீஸ் படை அமைக்க வேண்டும்என சிவசேனை தலைமையில், தமிழகத்தில் இருக்கும் பல இந்து அமைப்புகள் அரசைகேட்டுக் கொண்டுள்ளன.
மத மாற்றத்திற்கு எதிராக 3 நாள் கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடந்தது. இதுஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
இந்த கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துசேனா ராஜ்ய பிரமுகர் நாராயணன் கூறுகையில், இந்த கூட்டத்தில் மத மாற்றத்தைஎதிர்க்கும் அமைப்புகள் ஒன்று கூடி நாடு முழுவதும் நடை பெற்று வரும் மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க.விற்கு எதிராக பிரச்சாரம் செய்து அ.இ.அ.தி.மு.க. தலைவிஜெயலலிதாவை பதவிக்கு வர வைப்பதற்காக உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும், சிவசேனை தமிழகத்தில் எந்த அரசியில் கட்சியுடனும் கூட்டணிஅமைக்காது. சிவசேனை தனித்து 50 தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications