3 வது அணி பற்றி கவலையில்லை: வைகோ

Subscribe to Oneindia Tamil

-சென்னை:

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்தாலும் தி.மு.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுசெயலாளர்வைகோ தெரிவித்தார்.

சென்னையில் ம.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

பிரதமர் வாஜ்பாயின் கரத்தை வலுப்படுத்த வருகின்ற தமிழக தேர்தலில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறஉழைக்குமாறு கட்சியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாது புதுவையிலும் இக்கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3வது அணி அமைந்தாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து தேசீய ஜனநாய கூட்டத்தில்தெரிவிக்கப்படும் என கூறினார்.

திருநாவுக்கரசு பேட்டி: சென்னையில் நிருபர்களை சந்தித்த எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, எம்.பி, தமிழகத்தில் உள்ள 234தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க., தமிழக முதல்வர் கருணாநிதி கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் அ.தி.மு.க. கூட்டணி போல் இல்லாமல் சுமுகமாக பேசித் தீர்க்க தமிழக முதல்வர் இருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனை தொடர்ந்து இருந்த போதிலும் அக்கூட்டணியுடனேயே இது குறித்து த.மா.கா. பேச்சு நடத்துவதுவேடிக்கையாக உள்ளது.

வருகின்ற தேர்தலில் ஜெயலலிதா மட்டுமல்ல அவரது தோழி சசிகலாவும் போட்டியிட முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியின் விலகலால் தி.மு.க.கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை.

பிரதமர் வாஜ்பாய் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் செயல்படுத்தியுள்ள சிறப்பான திட்டங்களால் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+