ஹெலிகாப்டரில் வீரப்பனைத் தேடும் பணி தீவிரம்
கோவை;
வாளையாரிலிருந்து பர்கூர் காட்டிற்குத் தப்பிச் சென்ற வீரப்பனை ஹெலிகாப்டரிலிருந்து தேடும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலை, செம்மந்திமலை, வாளையார் உள்பட கேரள எல்லைப் பகுதியில் வீரப்பன் பதுங்கியிருப்பதாக கிடைத்ததகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த தேடுதல் வேட்டையின்போது வீரப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், வீரப்பன் இந்தக்காடுகளிலிருந்து தப்பிச் சென்று விட்டான். அதேசமயம், வீரப்பன் கூட்டாளியாக செயல்பட்ட மாறன் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில், தற்போது வீரப்பனை பர்கூர் காடுகளில் தேடும் வேட்டையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொளத்தூர் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருக்கலாம் எனக் கருதிய போலீசார், ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.தண்டாகேட், தோணிமடுவு போன்ற இடங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications