For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல்?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும்ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி பரிசீலித்து வரப்படுகிறது என தேர்தல் துணை ஆணையர்கள் சுபாஷ்பானி, சாயன் சட்டர்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழக தென் மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்த பின் நிருபர்களுடன் பேசிய துணை ஆணையர்கள்,

தமிழக தேர்தலுக்கு மட்டும் 50000 மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றின் செயல்பாடு குறித்து வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை.

தமிழகத்தில் 4.9 கோடி வாக்காளர்களில் 3.2 கோடி வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. விரைவில், ஆன்லைனில் வாக்காளர் அட்டை அளிப்பது பற்றிய ஒரு வார கால முகாம் விரைவில்தமிழகத்தில் நடைபெறும்.

தேர்தல் தேதி குறித்து தேவையான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்ற அவர்கள் ஊழல் வழக்கில் தண்டனைவழங்கப்பட்ட ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

நடைபெறவுள்ள 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்ததேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஜெயலலிதாசென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தேர்தல் கமிஷன் இவ்வாறு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை தயாரித்தளித்துள்ள, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவல்லுநர்கள் அவற்றின் செயல்பாட்டை நிருபர்களுக்கு விளக்கி காட்டினர்

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X