வீரப்பனின் இன்னொரு கூட்டாளி சாரையன் கைது
அந்தியூர்:
சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்த வீரப்பன் கூட்டாளி சாரையனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இருந்த வீரப்பன், பண்ணாரி, சத்தியமங்கலம் காட்டுக்குத் தப்பிச் சென்றதும், அதிரடிப்படையினரின் கவனம் அங்குதிரும்பியது. அதிரடிப்படையினர் தற்போது இங்குள்ள காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஒரு கும்பல் எண்ணமங்கலம் பிரிவு என்ற இடத்திற்கு அருகில் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடிக்க போலீசார்முயன்றபோது அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
சிக்கிக் கொண்ட சாரையன், பல்வேறு இடங்களில் சந்தனமரங்களைக் கடத்தியது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகப் போலீசார் தேடப்பட்டுவந்தவர்.
சில நாட்களுக்கு முன்பு வீரப்பனிடமிருந்து பிரிந்து வந்து தனியாக சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சாரையனிடமிருந்து சந்தனமரங்கள் மற்றும் அரிசி, ராகி ஆகியவை உட்பட பல்வேறு பொருட்களைக் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சாரையன், பவானி ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.