For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெளடா மனைவிக்கு சென்னை டாக்டர்கள் சிகிச்சை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆசிட் வீச்சால் காயமடைந்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மனைவி சென்னம்மாவிற்கு,சென்னையைச் சேர்ந்த இரண்டு பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர்கள் பெங்களூர் சென்று சிகிச்சை அளித்தனர்.

சென்னம்மா கெளடா மீது அவரது உறவினர் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் காயமடைந்த சென்னம்மா பெங்களூர் மல்லையா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நி லையில், சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணா, டாக்டர்பாலாஜி ஆகிய இருவரும் பெங்களூர் சென்று சென்னம்மாவிற்கு சிறப்பு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஐக்கிய ஜனதா தளத் த லைவர் ஜி.ஏ. வடிவேலு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில்சிறந்தவர்களான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணா மற்றும் டாக்டர் பாலாஜி ஆகிய இருவரும் எங்களது வேண்டுகோளை ஏற்று பெங்களூர் மல்லையாமருத்துவமனை சென்று சென்னம்மாவிற்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் உதயசங்கர், தாஸ், ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்துவிவாதித்தனர். சில ஆலோசனைகளையும் அவர்கள் தெரிவித்தனர். இன்னும் 10 நாள் கழித்து மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்யுமாறும் அறிவுறுத்தினர்.

எங்களது கோரிக்கையை ஏற்று மனிதாபிமானத் தோடு பெங்களூர் சென்று சென்னம்மாவிற்கு சிகிச்சை அளித்த இரு டாக்டர்க ளையும் ஐக்கிய ஜனதாதளம்பாராட்டுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X