குற்றவாளி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் காயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே 7 பேர் கும்பல் ஒன்று தாக்கியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:
சிவகுமார் என்பவரின் தலைமையில் 7 பேர் கும்பல் கொண்ட கும்பல் ஒன்று பட்டீல்வரம் காவல் நிலையத்திற்கு வந்தது.
இன்ஸ்பெக்டர் தம்பிதுரை சிவகுமார் மேல் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து அவருடன், இந்த கும்பலை சேர்நதவர்கள்தகராறு செய்தனர்.
அவர்கள் தம்பிதுரையைக் கட்டையால் தாக்கினர். உடன் அங்கிருந்த கான்ஸ்டபிள் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த கும்பலைச்சேர்ந்த அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
காயமடைந்த இன்ஸ்பெக்டர் தம்பிதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள்கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications