எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை: தெளிவாகக் கூறுகிறார் மூப்பனார்
சென்னை:
தேர்தல் கூட்டணி குறித்து அனைவரையும் குழப்பி வரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தனக்கு கூட்டணி குறித்துஎந்தக் குழப்பமும் இல்லை என்று தெளிவாகக் கூறினார்.
சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தொடர்ந்து அவர் பல்வேறு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.செவ்வாய்க்கிழமையும் அவர் ஆலோச னை நடத்தினார். புதுவை மாநில முதல்வர் சண்முகம், திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி, ஜெகவீர பாண்டியன் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணியைப் பொருத்தமட்டில் எந்தக் குழப்பமும் இல்லை. தினமும் இதுகுறித் தே பேசி வருகிறோம்.
3-வது கூட்டணி என்று இல்லை, 1-வது, 2-வது கூட்டணிக்கும் இன்னும் வாய்ப்புகள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்.அவசரப்படாதீர்கள்.
கதவை அடைத்து விட்டோம் என்று அவர்கள் (திமுக) கூறி விட்டார்கள். நீங்கள் வேண்டுமானால் எங்களுக்காக சிபாரிசுசெய்யுங்களேன் என்று நிருபர்களைப் பார்த்துக் கூறினார் மூப்பனார்.
பின்னர் வீரமணியிடம்,மூப்பனாரைச் சந்தித்த காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விசேஷம் ஏதும் இல்லை. அவரதுஉடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. எனவே, மூன்றாவது கூட்டணி அமையுமாஎன்பது குறித்து கருத்துக் கூறமுடியாது என்றார்.












Click it and Unblock the Notifications