For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் மதானியை விடுவிக்கக் கோரி ஊர்வலம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யக் கோரிஅக்கட்சியினர் திங்கள்கிழமை கோவையில் ஊர்வலம் நடத்த முயன்றனர்.

ஆனால், இவர்கள் கேரள தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்குகுவிக்கப்பட்டனர்.

கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்குத் தொடார்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கேரள ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர்மதானியை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அவரது கட்சியினர் கோவை வாளையார் பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.

இவர்களுக்கு ஏற்கனவே தமிழக போலீசார் அனுமதி மறுத்திருந்ததால், தமிழக எல்லைப் பகுதியான வாளையாரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டபோலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் இருந்த வந்த கேரள மக்கள் கட்சித் தொண்டர்கள், கேரள மாநிலத்திற்குள்ளேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை கேரள போலீசாரே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கோவை போலீசாருக்கு எவ்வித சிக்கலும்,இல்லாமல் ஊர்வலம் ரத்தானது.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கோவைசிறையில் இருந்து வருகிறார். கோவையில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை துவக்க நிலையில் உள்ள இந்த வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்க வேண்டும் எனஅவரது கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் விசாரணை துவங்குவதாலும், வழக்கின் முக்கியத்துவம் கருதியும் அவரை விடுவிக்கஇயலாது என நீதிமன்றம் விடுவிக்க மறுத்து விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X