தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் ஆர்.எம்.வீரப்பன்!
சென்னை:
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். கழகம் மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதுகுறித்துக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம்கூறுகையில், எம்.பி. ஜெகத்ரட்சகன், முன்னாள்
அமைச்சர் ராமசாமி, ராஜா ஆகியோர்இந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள்தி.மு.கவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவார்கள்.
எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பது பிரச்சினையில்லை. தி.மு.க.வைமீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். மீண்டும்ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது.
தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் வந்துள்ளதற்குக் காரணம், பா.ம.க.தான். அக் கட்சிதான்தமிழகத்தின் முதல் ஜாதிக்கட்சி. அவர்களைப் பார்த்துத்தான் பிற ஜாதிக் கட்சிகள்முளைத்துள்ளன.
ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.சிலைமார்ச் 4-ம் தேதி சென்னை மேயர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என்றார்அவர்.
பேட்டியின் போது ஜெகத்ரட்சகன் எம்.பியும் உடனிருந்தார்.