சென்னை மாநகராட்சியில் த.மா.கா. கவுன்சிலர்கள் போராட்டம்
சென் னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், தாங்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததால், தமிழ் மாநிலகாங்கிரஸ் கவுன்சிலர்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும்போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
செவ்வாய்க்கிழைம காலை சென்னை மாநகராட்சிக் கூட்டம் நடந்தது. மேயர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கா லை 10மணிக்குக் கூட்டம் துவங்கியது. கூட்டம் துவங்கியதும், த.மா.கா. தலைவர் வெற்றி வேல் எழுந்து, தான் கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆனால் மேயர் ஸ்டாலின் அதற்கு அனுமதி மறுத்தார். கேள்வி நேரம் தொடர்ந்து நடக்கும் என்றார். அதைக் கேட்காத வெற்றிவேல், தொடர்ந்து தனது கருத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார். அதைப் பொருட்படுத்தாத மேயர், தொடர்ந்து கேள்வி நேரத்தைநடத்தினார்.
10.25க்குள் கேள்வி நேரம் முடிந்து 78 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போதும் த.மா.கா. உறுப்பினர்கள் தங்களதுகோரிக்கையை வலியுறுத்திய வண்ணம் இருந்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேயர் ஸ்டாலினும், திமுகஉறுப்பினர்களும் அவையை விட்டு வெளியே சென்று விட்டனர்.
ஆனால் த.மா.கா. உறுப்பினர்கள் தொடர்ந்து அவைக்குள்ளேயே இருந்து போராடினர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுககவுன்சிலர்களும் போராடினர்.
சிறிது நிேரத்திற்குப் பிறகு, இரு கட்சி உறுப்பினர்களும், மாநகராட்சி மன்றத்திற்கு வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல்அறிந்து, தமா.கா தலைவர் ஜெயந்தி நடராஜன் அங்கு வந்தார். நடந்த சம்பவம் குறித்து கேட்டார். பின்னர் அவரதுவேண்டுகோளை ஏற்று த.மா.கா. கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை பிற்பகல் 1.35 மணியளவில் முடித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications